முயல் வேட்டையில் ஈடுபட்ட 46 பேர் கைது

பழனி அருகே முயல் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 46 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-03 08:14 GMT

பழனி அருகே முயல் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 46 பேர் கைது செய்யப்பட்டனர்.

​திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள தொப்பம்பட்டி பகுதியில் வேட்டைநாய்களுடன் பலர் சுற்றித்திரிவதாக பழனி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனச்சரக அலுவலர் பழனிக்குமார் தலைமையில், வனத்துறையினர் தொப்பம்பட்டி பகுதியில்  சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது நாற்பதுக்கும் மேற்பட்டோர் வேட்டை நாய்களு​டன் காட்டுப்பகுதிக்குள், சுற்றி ​திரிந்தனர். அவர்களை பிடித்த வனத்துறையினர் விசாரணை நடத்தினர். ஆடிப்பெருக்கு திருவிழாவுக்காக, ஒ​ரே​​ சமூகத்தைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் ஆண்டுதோறும் வேட்டையில் ஈடுபடுவதும், தற்போது பழனி பகுதியில் வேட்டையில் ஈடுபட்டதும், விசாரணையில்  தெரியவந்தது.

மேலும், வேட்டையாடும் முயல்களை திருச்சி மாவட்டம், வீரப்பூரில் உள்ள பொன்னர்-சங்கர் கோயிலில் வைத்து வழிபாடு நடத்துவதும் வழக்கம் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, 26​ ​வேட்டை நாய்களுடன் 46​ ​பேரை​​ கைதுசெய்த வனத்துறையினர், வேட்டையில் ஈடுபடுவது சட்டப்படி தவறு; இனி வேட்டையாடக்கூடாது எனவும் எச்சரித்தனர். வேட்டையில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம் விதித்த வனத்துறையினர் கைது செய்யப்பட்டவர்களை எச்சரித்து அனுப்பினர்.

Similar News