சித்ரா பவுர்ணமி: மங்கலதேவி கண்ணகி கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு

கேரளாவை ஒட்டி தமிழக வனஎல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில், சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

Update: 2022-04-16 11:45 GMT

கண்ணகி கோயில் வளாகத்திற்குள் குவிருந்திருந்த பக்தர்கள்.

தமிழக - கேரள எல்லையில் தமிழக வனப்பகுதியில் உள்ள கண்ணகி கோயிலுக்கு,  கேரளாவில் உள்ள  மலைப்பாதை வழியாக செல்ல வேண்டும். குமுளியில் இருந்து பதிமூன்று கி.மீ., துாரம் மலைப்பாதையில் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் இன்று ஒரு நாள் மட்டும் அனுமதி உண்டு. தமிழக கேரள வருவாய்த்துறை, போலீஸ்துறை, வனத்துறை அதிகாரிகள் இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்தனர்.

சித்ராபவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு கண்ணகியை வழிபட நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

பக்தர்களுக்கு குடிநீர் வசதி, உணவு வசதி, மருத்துவ முதலுதவி வசதிகள் செய்யப்பட்டிருந்தன. காலை ஐந்து மணி முதல் மதியம் இரண்டு மணி வரை பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதித்தனர். கோயிலில் இருந்து மாலை ஆறு மணிக்குள் வெளியேறி விிட வேண்டும். அதேபோல் பக்தர்கள் வெளியேறி விட்டனர்.

தமிழர்கள் கண்ணகியை தமிழ் கடவுளாகவும், கற்புக்கரசியாகவும், கற்புடை தெய்வமாகவும் வழிபட்டனர். கேரள மக்கள் கண்ணகியை, கேரளத்து காளியாக வழிபட்டனர். காலை முதல், மாலை வரை வந்த பக்தர்கள் எண்ணிக்கை நான்கு இலக்கத்தில் பல ஆயிரத்தை எட்டும். சாமி கும்பிட ஒரு மணி நேரம் முதல், ஒண்ணரை மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டி இருந்தது என பக்தர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News