போர் வெற்றி பொன்விழா ஜோதிக்கு கடலோரக் காவல் படையினர் மரியாதை

1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரில் பெற்ற வெற்றியின் பொன்விழா ஆண்டை கொண்டாடும் விதமாக வெற்றி ஜோதி பயணம்.

Update: 2021-09-04 04:53 GMT

1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரில் பெற்ற வெற்றியின் பொன்விழா ஆண்டை கொண்டாடும் விதமாக புதுதில்லியிலிருந்து கன்னியாகுமரி வழியாக சென்னை வந்துள்ள வெற்றி ஜோதிக்கு கிழக்கு பிராந்திய கடலோரக் காவல்படை சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்திய தளபதி ஆனந்த் பிரகாஷ் படோலா கலந்து கொண்டு வெற்றி ஜோதியை பெற்றுக் கொண்டு நிலையில் பொருத்தி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் போரில் பங்கேற்ற ஐந்து முன்னாள் வீரர்கள் பாராட்டப்பட்டனர்.  

Tags:    

Similar News