திருவொற்றியூரில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு அதிமுகவினர் நிவாரண உதவி

திருவொற்றியூரில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அதிமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

Update: 2021-11-13 07:15 GMT

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ராஜாஜி நகர்  மக்களுக்கு, அதிமுக சார்பில் நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.

சென்னை திருவொற்றியூர் மேற்கு பகுதியில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ராஜாஜி நகர், கார்கில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு,  அதிமுக சார்பில் நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், பகுதி அதிமுக  செயலாளருமான கே குப்பன் தலைமை வகித்தார். எதிர்க்கட்சித் தலைவரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே பழனிசாமி கலந்து கொண்டு,  நிவாரண உதவிப் பொருட்களை வழங்கினார்.  இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாய், அரிசி,  பால்,  ரொட்டி,  வேட்டி சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வாங்கி சென்றனர்.

முன்னதாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை,  கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மூர்த்தி,  முன்னாள் அமைச்சர்கள் டி ஜெயக்குமார்,  பெஞ்சமின்,  வளர்மதி மற்றும் கட்சி நிர்வாகிகள் பரமசிவம்,  சிவில் முருகேசன்,  கார்த்திக்,  வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News