செங்கல்பட்டு மாவட்டத்தில் 737 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 737 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

Update: 2021-09-19 13:30 GMT

வெங்கம்பாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் கலெக்டர் ஆய்வு 

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள வெங்கம்பாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாம் உள்பட மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மாவட்ட ஆட்சியர் ஆ.ராகுல்நாத் ஆய்வு செய்தார்.

இரு குறித்து மாவட்ட ஆட்சியரகம் சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்,  செங்கல்பட்டு மாவட்டத்தில், தடுப்பூசி போடத் தகுதியுள்ள 9.50 லட்சம் பேரில் 6.40 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது. எஞ்சியோருக்கு தொடா்ந்து போடப்படுகிறது. மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை 11 லட்சத்துக்கும் அதிகமான பேருக்கு தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது. மீதியுள்ளவர்களுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்தப்படும்.

ஞாயிற்றுக் கிழமையான இன்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் செங்கல்பட்டில் 126 இடங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 737 இடங்களில் தடுப்பூசிகள் செலுத்தும் பணியில் 50 மருத்துவா்கள் உள்பட 700 செவிலியா்கள் ஈடுபட்டனா். இன்று மட்டும் 43.ஆயிரத்து 463 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News