சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கடன் தொல்லையால், சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-10-05 06:45 GMT

தற்கொலை செய்து கொண்ட கௌதம்.

செங்கல்பட்டு மாவட்டம் மேலகோட்டையூர் காவலர் குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு வசித்து வந்தவர், சென்னை ஆயுதப்படை சிறப்பு பிரிவு ஆய்வாளர் கௌதம். இவர் கடந்த சில நாட்களாக மனவருத்தத்தில் இருந்துள்ளார். மேலும், அவருக்கு கடன் தொல்லை அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது

இதன் காரணமாக, குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டது. மிகுந்த மனவருத்தத்தில் இருந்த அவர்,  இன்று காலையில், தான் வைத்திருந்த துப்பாக்கியால், படுக்கை அறையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றி, தாழம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக, முதல்கட்ட வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 59 வயதான கௌதமன் உடல், உடற்கூறு ஆய்வுக்காக உடலை கைப்பற்றிய போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News