நெரும்பூர் தன்வந்திரி மகா கணபதி ஆலய கும்பாபிஷேக விழா

நெரும்பூர் அருள்மிகு தன்வந்திரி மகா கணபதி ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2021-09-10 07:30 GMT

நெரும்பூர் கிராமத்தில்  நடந்த அருள்மிகு ஸ்ரீ மகாகணபதி ஆலயத்தில் கும்பாபிஷேகம் 

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் நெரும்பூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மகாகணபதி ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக நேற்றைய தினம் காலை முதல் கால யாக பூஜைகள் துவங்கி நேற்று மாலை இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி தினமான இன்று காலை 10 மணிக்கு புனிதநீர் உள்ள கலசத்தை சிவாச்சாரியார்கள் மற்றும் அகஸ்திய கிருபா அன்புச் செழியன் ஆகியோரின் தலைமையில் மங்கள வாத்தியம் முழங்க யாகசாலையில் இருந்து கலச நீர் கொண்டுவரப்பட்டு கோவில் விமானம் மற்றும் மூலவ கணபதிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இ

தில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News