திருப்போரூரில் சுய தொழில் முனைவோருக்கு கடன் உதவி : அமைச்சர் அன்பரசன் வழங்கல்

திருப்போரூரில் மகளிர் திட்டத்தின் கீழ் கிராமப்புற சுய தொழில் முனைவோர் மகளிர் குழுவினருக்கு கடன் உதவிகளை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.

Update: 2021-06-30 10:08 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சுயதொழில் முனைவோருக்கு கடனுதவிகளை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சுயதொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா. மோ.அன்பரசன்  கலந்துகொண்டு கடன் உதவிகளை வழங்கினார்.

பின்னர் பேசிய அமைச்சர், கிராமப்புற சுய தொழில் முனைவோர் கடன் உதவி திட்டம் சார்பாக 280 பயணிகளுக்கு 1 கோடியே 13 லட்சம் ரூபாயும் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக இஸ்லாமிய பெண்கள் 321 பயனாளிகளுக்கு 30 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஊரக புத்தாக்க திட்டம் சார்பாக 14 பயனாளிகளுக்கு 6 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயும்,  மொத்தம் 636 பயனாளிகளுக்கு 1 கோடியே 49 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயை மகளிர் குழுவினருக்கு கடன் உதவி தொகையாக காசோலை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, மாவட்ட கோட்டாட்சியர் ஷாகிதாபர்வீன், திட்ட இயக்குனர் செல்வகுமார், திருப்போரூர் முன்னாள் எம் எல் ஏ இதயவர்மன், உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News