அகில இந்திய இறால் குஞ்சு உற்பத்தியாளர் சங்க பொதுக்குழு கூட்டம்

அகில இந்திய இறால் குஞ்சு உற்பத்தியாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-12-16 04:45 GMT

அகில இந்திய இறால் உற்பத்தியாளர்கள் சங்க பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் அகில இந்திய இறால் குஞ்சு உற்பத்தியாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இப்பொதுக்குழு கூட்டத்திற்கு அகில இந்திய இறால் குஞ்சு உற்பத்தியாளர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில தலைவர் ஸ்கால்ராஜ் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய இறால் குஞ்சு உற்பத்தியாளர் சங்கத்தலைவர் எலஞ்சி ரவி கலந்து கொண்டு பேசினார். குறிப்பாக இப்பொதுக்குழு கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள இறால் பண்ணைகளுக்கு ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய், 6.50(ஆறுரூபாய் ஐம்பது காசு) காசு வசூலிக்கப்பட்டு வந்ததை தமிழக அரசு ரூ.8.50(எட்டு ரூபாய் ஐம்பது காசு) கட்டணமாக உயர்த்தி அறிவித்தது.

இதையடுத்து உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைத்து பழைய கட்டணத்தையே (6.50) வசூலிக்க வேண்டும் என்று இறால் குஞ்சு உற்பத்தியாளர் சங்கத்தினர் தமிழ்நாடு மின்வாரிய குறைதீர் மன்றத்தில் முறையிட்டனர். இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினிடமும் கோரிக்கை வைத்தனர். 

இவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு மின்வாரிய நிர்வாகத்திற்கு உயர்த்தப்பட்ட(8.50) கட்டண திட்டத்தை ரத்து செய்து பழைய கட்டணத்தையே(6.50) வசூலிக்க உத்தரவிட்டது. இதையடுத்து மாமல்லபுரத்தில் நடந்த இறால் குஞ்சு உற்பத்தியாளர் சங்கத்தின் அகில இந்திய பொதுக்குழு கூட்டத்தில் மின் கட்டண குறைப்புக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த அகில இந்திய இறால் குஞ்சு உற்பத்தியாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மகராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து இறால் குஞ்சு உற்பத்தியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அகில இந்திய அளவில் சிறந்த இறால் பண்ணை நிர்வகிக்கும் உற்பத்தியாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News