மீன்வலையில் சிக்கி மீனவர் உயிரிழப்பு

Update: 2021-01-28 10:15 GMT

மாமல்லபுரம் அருகே கட்டுமர படகில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் கடலில் விரிக்கப்பட்டிருந்த வலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாமல்லபுரம் குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்.இவர் தினமும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று கட்டுமரத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற இவர் திரும்பி வரும் போது கடலில் மற்ற மீனவர்களால் விரிக்கப்பட்டிருந்த வலையில் சிக்கி கட்டுமரம் திடீரென கவிழ்ந்தது. இதில் ராஜேஷ் சிக்கி உயிர் இழந்தார்.இதனிடையே கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற சக மீனவர்கள் கடலில் கட்டுமர படகு கவிழ்ந்திருப்பதை பார்த்த போது வலையில் சிக்கி ராஜேஷ் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்த மீனவர்கள் ராஜேஷின் உடலையும் கைப்பற்றி கடற்கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கு வந்த மாமல்லபுரம் போலீசார் ராஜேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News