சித்தாமூர் ஒன்றியம் 3வது வார்டில் 6 முனைப்போட்டி

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 3வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 6 முனைப்போட்டி நிலவுகிறது

Update: 2021-09-30 13:30 GMT

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் 

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 3வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராமலிங்கம், தேமுதிக சார்பில் சுரேஷ்பாபு, நாம் தமிழர் கட்சி சார்பில் லோகநாதன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் மகாலிங்கம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வாசுதேவன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

3வது வார்டில் 6முனை போட்டி என்பதால் ஒன்றிய கவுன்சில் பகுதியில் தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News