சித்தாமூர் ஒன்றியம் 5வது வார்டில் 4 முனைப்போட்டி

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 5வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 4 முனைப்போட்டி நிலவுகிறது.

Update: 2021-09-30 16:30 GMT

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரேவதி

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 5 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் லதா, திமுக சார்பில் ரேவதி, நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யா, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோவிந்தம்மாள், ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

5வது வார்டில் 4 முனை போட்டி என்பதால் ஒன்றிய கவுன்சில் பகுதியில் தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News