சித்தாமூர் ஒன்றியம் 15 வது வார்டில் 5 முனைப்போட்டி

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 15வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 5 முனைப்போட்டி நிலவுகிறது.

Update: 2021-10-01 06:17 GMT

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும்  வேட்பாளர் அலமேலு.

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 15வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் கன்னியப்பன், அதிமுக சார்பில் அலமேலு, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ராணி, தேமுதிக சார்பில் ரம்யரசி, நாம் தமிழர் கட்சி சார்பில் சம்பத், சுயேட்சை வேட்பாளராக ராகவன் ஆகியோர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சித்தாமூர் 15 வது வார்டில் திமுக, அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பரபரப்பாக பிரசாரம் நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News