தஞ்சை கரந்தையில் ஆடிட்டர் வெட்டி படுகொலை - பரபரப்பு

தஞ்சை கரந்தையில், முன் விரோதம் காரணமாக, ஆடிட்டர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Update: 2022-05-11 02:30 GMT

மகேஸ்வரன்

தஞ்சாவூர், கரந்தை பகுதி சேர்வைக்காரன் தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன் (45). ஆடிட்டர். இவர் தன் வீட்டுக்கு அருகில் பண்ணை ஒன்று வைத்துள்ளார். அதில் ஆடு, கோழி, தென்னை மரங்கள் போன்றவற்றை வளர்த்து வந்துள்ளார். தினமும் பணி முடித்து இரவு,  பண்ணை வீட்டில் உணவு உண்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

நேற்றிரவு,  வழக்கம் போல்  இரவு பண்ணையில் அமர்ந்துள்ளார். அப்போது,  உங்களிடம் பேச வேண்டும் என்று கூறி,  மூன்று பேர் உள்ளே வந்துள்ளனர். மகேந்திரன் எதிர்பாராத நேரத்தில், அவரை மூன்று பேரும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இரத்த வெள்ளத்தில் விழுந்த அவர்,  சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

தகவலறிந்து அங்கு  வந்த மேற்கு காவல்துறையினர்,  உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், அவரின் பண்ணைக்கு எதிரில் மாநகராட்சி சொந்தமான குளியல் மற்றும் கழிவறை கட்டிடம் உள்ளது. இதை ஆடிட்டர் மகேஸ்வரன் சமீபத்தில்தான் ஏலத்திற்கு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஏலம் விவகாரத்தில், மகேஸ்வரனுக்கும் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது கொலையில் முடிந்துள்ளது. தப்பியோடிய குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த கொலை, தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Tags:    

Similar News