தேனி மாவட்டம் சுருளி அருவியில் குளிக்க வனத்துறை திடீர் தடை

சுருளி அருவியில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள் குளிக்க வர வேண்டாம் என வனத்துறை தடை விதித்துள்ளது.

Update: 2022-07-03 04:43 GMT

சுருளிஅருவி பைல் படம்.

தேனி மாவட்டம், மேகமலையில் பெய்யும் மழை நீர் சுருளிஅருவிக்கு வந்து சேரும். தேனி மாவட்டத்தில் மழைப்பொழிவு மிக, மிக குறைவாக இருந்தாலும், நேற்று இரவு மேகமலை வனப்பகுதியில் மழை கூடுதலாக பெய்துள்ளது. இதனால் இன்று காலை முதல் சுருளிஅருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் யாரும் குளிக்க வர வேண்டாம் என வனத்துறை தடை விதித்துள்ளது.

Tags:    

Similar News