காலில் கட்டுப்போட்டு விமானத்தில் தங்கத்தை கடத்திய ஆசாமி

89 லட்சம் மதிப்புடைய தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.

Update: 2021-05-17 04:47 GMT

துபாயிலிருந்து சென்னைக்கு வந்த சிறப்பு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.89 லட்சம் மதிப்புடைய 1.8 தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, கடத்திய பயணி மற்றும் கடத்தல் தங்கத்தை வாங்கி செல்ல வந்திருந்த ஆசாமி ஆகிய இருவா் கைது.

துபாயிலிருந்து எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று அதிகாலை சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தது.அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.

அப்போது சென்னையை சோ்ந்த முகமது அஸ்ரப்(21) என்ற பயணி,தன்னிடம் சுங்கவரி செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறினார். அதோடு வேகமாக கிரீன் சேனல் வழியாக வெளியே சென்றார்.. அவா் மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வெளியே சென்ற முகமது அஸ்ரப்பை மீண்டும் உள்ளே அழைத்து வந்து,உடமைகளை சோதனையிட்டனா். உடமைகளில் எதுவும் இல்லை.

ஆனாலும் சந்தேகம் தீராமல்,அவரை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக சோதித்தனா்.அப்போது அவருடைய இரு கால்களிலும் பெரிய பேண்டேய்ட் துணி ஒட்டப்பட்டிருந்தது. சந்தேகத்தில் அந்த பேண்டேய்ட் துணியை பிரித்து பார்த்தனா். உள்ளே தங்கக்கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மொத்தம் 1.8 கிலோ தங்கத்தை கைப்பற்றினா். அதன் சா்வதேச மதிப்பு ரூ.89.17 லட்சம்.

இதையடுத்து முகமது அஸ்ரபிடம் மேலும் விசாரணை நடத்தினா். அப்போது தன்னை தங்கம் கடத்தல் கும்பலை சோ்ந்த முகமது இப்ராகீம் (39) என்பவருக்காகதான் இந்த தங்கத்தை கடத்தி வருவதாகவும், அவா் தற்போது விமான நிலையத்திற்கு வெளியே நிற்பதாகவும் கூறினார். இதையடுத்து சுங்கத்துறையினா் அவரையும் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரிடமும் சுங்கத்துறையினா் மேலும் தீவிரமாக விசாரணை நடத்துகின்றனா்.

Tags:    

Similar News