கல்வி நிறுவன தங்கும் விடுதிகளை பதிவு செய்து கொள்ள கலெக்டர் அறிவிப்பு

Ariyalur News Today - அரியலூர் மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களின் விடுதிகளை பதிவு செய்து கொள்ள மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

Update: 2022-07-29 07:33 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி.

Ariyalur News Today - அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களினால் நடத்தப்பட்டு வரும் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான தங்கும் இல்லங்கள் மற்றும் விடுதிகள் அனைத்தும், தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குமுறை) சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015படி தங்களது விடுதிகளை பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இல்லங்கள் பதிவு செய்வதற்கு பதிவு கட்டணமாக ரூ.3000/-   District Collector, Ariyalur என்ற பெயரில் வரைவேலை எடுத்து வழங்கப்பட வேண்டும் எனவும், பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தினை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2வது தளம், அரசு பல்துறை வளாகம், அரியலூர் - 621704, தொலைபேசி எண் 04329-296239 என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.

பதிவு பெறாமல் நடத்தப்படும் விடுதிகள் கண்டறியப்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News