தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு பெற 7 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழகம் முழுவதும் 7,19,895 பேர் புதிய ஸ்மார்ட் கார்டு கோரி விண்ணப்பித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது

Update: 2021-08-12 08:44 GMT

பைல் படம்

மே முதல் ஜூலை மாதம் வரை புதிதாக ஸ்மார்ட் கார்டு பெறுவதற்கு சுமார் 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 7,19,895 பேர் புதிய ஸ்மார்ட் கார்டு கோரி விண்ணப்பித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதத்தில் 1,26,414 பேரும், ஜூன் மாதத்தில் 1,57,497 பேரும் ,ஜூலை மாதத்தில் 2,61,529 பேரும் விண்ணப்பித்துள்ளனர். 4,52,188 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1,35,730 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்தது.

Tags:    

Similar News