'ஜிப்மரில் இந்தி அனுமதி' - கடுப்பாகி கவிதை பதிவிட்ட வைரமுத்து!

இந்தி, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது; அதற்காக வருந்துகிறோம் என்று கவிஞர் வைரமுத்து, இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிராக கருத்து பதிவிட்டுள்ளார்.

Update: 2022-05-09 05:45 GMT

வைரமுத்து

புதுச்சேரியில் இயங்கி வரும் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இனி வரும் காலங்களில் அலுவல் ரீதியான பயன்பாட்டை இந்தியில் மாற்றுவது தொடர்பாக , புதிய சுற்றறிக்கையை புதுச்சேரி ஜிப்மர் இயக்குநர் பிறப்பித்தார்.

இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவை திரும்ப வலியுறுத்தி, புதுச்சேரி தி.மு.க சார்பில் ஜிப்மர் மருத்துவமனை  எதிரே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், ஜிப்மர் விவகாரம் தொடர்பாக, கவிஞர் வைரமுத்து, டிவிட்டரில் கவிதை வடிவில் கருத்து பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கடைசியில் இந்தி

ஜிப்மர் மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்டிருக்கிறது;

வருந்துகிறோம்


இந்தி படிப்போரை

வெறுக்கமாட்டோம்;

திணிப்போரை

ரசிக்கமாட்டோம்


ஒருமைப்பாடு

சிறுமைப்படாதிருக்க

நாட்டின் பன்மைக்கலாசாரம்

பாதுகாக்கப்படவேண்டும்


சிலர்

நுழைக்கப்பார்ப்பது

ஊசியில் நூலன்று;

ஒட்டகம்

இவ்வாறு, வைரமுத்து கூறியுள்ளார்.

Tags:    

Similar News