திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 12 இடங்களில் மனித சங்கிலி

திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 12 இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற இருப்பதாக பரஞ்ஜோதி அறிவித்துள்ளார்.

Update: 2024-03-11 15:35 GMT

முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 12 இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.

விடியா திமுக அரசு பதவியேற்ற நாளிலிருந்து சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளதோடு; தமிழகம் போதைப் பொருட்களின் தலைநகரமாக மாறி, வருங்காலத் தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிந்து வருவதற்கும்; போதை பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கும் காரணமான விடியா தி.மு.க அரசை கண்டித்தும்; போதைப் பொருள் புழக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வலியுறுத்தியும், 12.3.2024, செவ்வாய்கிழமை காலை 10மணியளவில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் கீழ்க்கண்ட 12 இடங்களில் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும்.

ஶ்ரீரங்கம் தொகுதி

1.ஶ்ரீரங்கம், திருவானைக்காவல்

2.பெட்டவாய்த்தலை

மண்ணச்சநல்லூர் தொகுதி

3.சமயபுரம்

4.மண்ணச்சநல்லூர்

முசிறி தொகுதி

5.முசிறி

6.தொட்டியம்

7.காட்டுப்புத்தூர்

8.தா.பேட்டை

9.மேட்டுப்பாளையம்

துறையூர் தொகுதி

10.துறையூர்

11.உப்பிலியபுரம்

12.பாலகிருஷ்ணம்பட்டி

அதுசமயம் அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி கூறி உள்ளார்.

Tags:    

Similar News