ஓபிஎஸ் மனைவி மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் அஞ்சலி

ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி மாரடைப்பால் காலமானார், மருத்துவமனையில் அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, ஓபிஎஸ்க்கு ஆறுதல் கூறினர்.

Update: 2021-09-01 13:31 GMT
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ்க்கு ஆறுதல் கூறினார்.

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி(63) மாரடைப்பால் காலமானார்.

உடல் நலக்குறைவால் கடந்த 22ம் தேதி விஜயலட்சுமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 2 வார காலமாக அவருக்கு தொடர்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரின் மறைவுக்கு அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள், உட்பட அனைத்துக் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சட்டமன்றத்தில் இருந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், என அனைத்து கட்சியினரும் பெருங்குடி தனியார் மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மனைவியை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு சேகர் பாபு, ஆகியோரும் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News