திமுகவின் கவலை என்ன தெரியுமா- பாஜக தலைவர் குற்றச்சாட்டு

திமுக, தான் கொடுத்த வாக்குறுதிகளை மக்களுக்கு நிறைவேற்றவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்;

Update: 2022-04-16 01:37 GMT

மக்களை பற்றி கவலை படாமல் நான் ஐபிஎஸ் படித்தேனா என்பதே திமுகவின் கவலை- பாஜக தலைவர்

மக்களுக்கு ஆசை காட்டி ஆட்சியில் அமர்ந்த திமுக, தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ...

மக்களுக்கு ஆசை காட்டி ஆட்சியில் அமர்ந்த திமுக, தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழ் நாட்டை பற்றியும் மக்களை பற்றியும் கவலை படாமல் நான் ஐபிஎஸ் படித்தேனா என்பதே திமுகவின் கவலையாக உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் எதைச் சொன்னாலும் நம்பக்கூடிய ஏதுமறியாதவர்கள் என்ற இறுமாப்பு நினைப்பில் திமுக இருக்கிறது.

தொடர்ந்து ஆதாரமில்லாத செய்திகளை திரும்பத் திரும்ப சொல்வதால் அவையெல்லாம் உண்மையாகிவிடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News