நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - தேமுதிக தனித்துப்போட்டி என அறிவிப்பு

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று, அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

Update: 2021-11-29 14:15 GMT

இது தொடர்பாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும். தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளும், தொண்டர்களும், தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை டிசம்பர் 1-ம் தேதி முதல்,  7-ம்தேதி வரை,  அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு,  தேமுதிகவின் நிர்வாகியாக இருப்பவர்களும், தேமுதிகவின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News