சிறப்பு அந்தஸ்து அல்ல, சிறப்பு நிதியை விரும்பும் சந்திரபாபு நாயுடு

மத்திய அரசிடம் இருந்து சிறப்பு நிதித் தொகுப்பைப் பெறுவதும், ஆந்திராவின் விரைவான வளர்ச்சித் திட்டங்களுக்கு முதலீடுகளை ஈர்ப்பதும் சந்திரபாபு நாயுடுவின் முக்கிய முன்னுரிமைகள்

Update: 2024-07-06 06:44 GMT

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

ஆந்திரப் பிரதேசத்தை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சியில், முதல்வர் சந்திரபாபு நாயுடு மூன்று முக்கிய பணிகளில் கவனம் செலுத்துகிறார்: மத்திய அரசிடமிருந்து சிறப்பு நிதித் தொகுப்பை பெறுதல், முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவரது கட்சியினர் கட்டுப்படுத்தப்படுவர் ம் என்று முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்தல் ஆகியவை

குறிப்பாக, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க தெலுங்கு தேசம் கட்சி முயற்சி செய்யவில்லை, ஆனால் மத்திய அரசிடம் இருந்து சிறப்பு நிதித் தொகுப்பைப் பெறுவதில் கவனம் செலுத்துகிறது என்று நாயுடுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

அமராவதியை மாநிலத் தலைநகராக உருவாக்குதல், போலவரம் நீர்த் திட்டம் தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பது உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களை துரிதப்படுத்த இந்த தொகுப்பு பயன்படுத்தப்படும்.

தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக அமராவதியில் ரிங்ரோடு மற்றும் அரசு கட்டிடங்கள் உள்ளிட்ட சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை முடிப்பதில் தெலுங்கு தேசம் கட்சி-பாஜக-ஜனசேனா அரசு கவனம் செலுத்துகிறது.

கடந்த இரண்டு நாட்களில், நாயுடு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் பியூஷ் கோயல் மற்றும் சிவராஜ் சிங் சவுகான் உட்பட பல மத்திய அமைச்சர்களை சந்தித்தார்.

ஆந்திரப் பிரதேசத்தில் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதில் ஆதரவைப் பெறுவதற்கு ஈடாக, மத்திய பாஜகவின் நம்பகமான கூட்டாளியாகத் தொடர தெலுங்குதேசம் விரும்புகிறது.

"டிடிபி கட்சி மத்திய அரசிடம் எந்த இலாகாக்களையும் கேட்கவில்லை. லோக்சபா துணை சபாநாயகர் பதவியை கூட அது தேடவில்லை. அப்படியிருந்தும், தெலுங்கு தேசம் கட்சிக்கு இரண்டு பதிவிகள்ஒதுக்கப்பட்டுள்ளன" என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்திய அரசின் உதவியுடன், ஐதராபாத்தை பல தசாப்தங்களுக்கு முன்பு உருவாக்கியதைப் போல அமராவதியை மேம்படுத்த நாயுடு இலக்கு வைத்துள்ளார்.

உலகளாவிய முதலீடுகளை மாநிலத்திற்கு கொண்டு வர "உலகளவில் சிந்தியுங்கள், உலகளவில் செயல்படுங்கள்" என்ற யோசனையையும் நாயுடு முன்மொழிந்தார்.

மாநிலத்தின் மனித மூலதனத்தை மதிப்பிடுவதற்கும், முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும் திறமையைக் காட்டுவதற்கும் திறன் மேம்பாட்டுக் கணக்கெடுப்பைத் தொடங்கவும் அவரது அரசாங்கம் தயாராக உள்ளது. இருப்பினும், தனியார் துறையில் உள்ளூர் இடஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்துவதற்கு நாயுடு எதிரானவர்,

இரு தெலுங்கு மாநிலங்களுக்கு இடையே நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை நாயுடு சனிக்கிழமை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News