பிரதமர் மோடியை ஆந்திர முதலமைச்சர் சந்திப்பு

பிரதமர் மோடியை ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று சந்தித்து பேசினார்.

Update: 2024-02-09 08:30 GMT

ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் அம்மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று அட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். அதேபோல் மீண்டும் ஆட்சியை பிடிக்க தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார். இதற்ககாக அக்கட்சிகள் பல்வேறு முன்னேற்பாடுகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்து பேசினார். தெலுங்கு தேச கட்சித்தலைவர் சந்திரபாபுநாயுடு நேற்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News