யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் பறவை மோதியதால் வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது

Update: 2022-06-26 05:17 GMT

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் லக்னோவுக்குச் சென்று கொண்டிருந்தபோது பறவைகள் தாக்கியதால் வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து உ.பி முதல்வர் சர்க்யூட் ஹவுஸ் திரும்பினார். உ.பி முதல்வர் ஆதித்யநாத் அரசு விமானத்தில் லக்னோவுக்கு தனது பயணத்தைத் தொடர்வார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நிர்வாகம் செய்துள்ளது.

Tags:    

Similar News