காவிரி-பெண்ணாறு உள்பட 5 நதிகள் இணைப்பு: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்றத்தில், 2022- 23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார். பல்வேறு அறிவிப்புகளை, அவர் வெளியிட்டு வருகிறார்.

Update: 2022-02-01 05:30 GMT

அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் நேற்று தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உரை நிகழ்த்தினார்.இதைத் தொடர்ந்து, 2022- 23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று தாக்கல் செய்து,  உரையாற்றி வருகிறார். அவரது பட்ஜெட் உரையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு:

  • கொரோனா பெருந்தொற்று காலத்திலும் நாட்டில் பொருளாதாரம் முன்னேற்றி வருகிறது.  தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால், கொரோனா பரவல் குறைந்துள்ளது.
  • ஏழைகள், நடுத்தர மக்களின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு செயலாற்றி வருகிறது. அடுத்த 25, ஆண்டுகளின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில், அதை இலக்காகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. 
  •  நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 9.27,சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்ற முக்கியத்துவம் தரப்படும்.
  • மேக் இன் இந்தியா என்ற சுய சார்பு திட்டத்தின் மூலம் 60, லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 
  •  நாடு முழுவதும் 22, ஆயிரம் கி.மீ. நீளத்திற்கு ரயில்வே கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளில் வந்தே பாரத் திட்டத்தில்,  400, ரயில்கள் அறிமுகம் செய்யப்படும்.
  • உள்ளூர் வணிகம் மேம்பட ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்திப் பொருள்  என்ற அடிப்படையில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
  • போக்குவாத்து மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் தரப்படும்
  •  நாடு முழுவதும் 25000,கி.மீ தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்படும். 
  • இயற்கை விவசாய முறை ஊக்குவிக்கப்படும். விவசாயப்பணிகளுக்கு டிரோன்கள் பயன்படுத்தப்படும். நிலங்களை அளப்பதற்கு டிரோன் கிசான் அறிமுகம் செய்யப்படும். 
  • எண்ணெய் வித்துகள், சிறு தானிய உற்பத்திக்கு அரசு முக்கியத்துவம் தரும்.
  • ரூ.44,000, கோடியில் நீர்ப்பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். காவிரி- பெண்ணாறு உள்ளிட்ட ஐந்து நதிகளின் இணைப்புக்கு திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. 
Tags:    

Similar News