ராகுலுக்கு சம்மன் அனுப்பியதை காங்கிரஸ் எதிர்ப்பது பாசாங்கு: திரிணாமுல்

எங்கள் தலைவர்கள் அழைக்கப்பட்டபோது காங்கிரஸ் எதிர்க்கவில்லை; இப்போது மட்டும் ஏன் போராட்டம் நடத்த வேண்டும் என திரிணாமுல் கேள்வி

Update: 2022-06-13 10:12 GMT

வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் கட்சி, ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது பாசாங்குத்தனம் என்று கூறியுள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை இயக்குனரகம் முன்பு ராகுல் காந்தி ஆஜராக உள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் அதிகாரபூர்வ நாளேடான 'ஜாகோ பங்களா' காங்கிரஸின் நடத்தை பாசாங்குத்தனமானது என்று கூறியுள்ளது.

திரிணாமுல் கட்சி நாளேடு ஜாகோ பங்களாவின் முதல் பக்கத்தில் 'ராகுலுக்கு ED சம்மன், காங்கிரஸ் எதிர்ப்பு, சோனியா மருத்துவமனையில் என்ற தலைப்பில் கூறியிருப்பதாவது:

ஏஜென்சிகளிடமிருந்து அழைப்பு வந்தவுடன், காங்கிரஸின் உயர்மட்டத் தலைமை பயத்தில் நடுங்கத் தொடங்கியது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் பிஎம்எல்ஏ-வின் கீழ் அமலாக்க இயக்குனரகம் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தி வருகிறது.

திரிணாமுல் அதன் பார்வையில் தெளிவாக உள்ளது; காங்கிரஸின் இந்த நாடு தழுவிய போராட்ட அழைப்பு, சந்தர்ப்பவாதம் மற்றும் இரட்டை நிலை அரசியலுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

மாநிலத்தில் தனது கட்சியின் எண்ணிக்கையை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வந்த வங்காள காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தினமும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தாக்கி வருகிறார்.

அவரும் அல்லது காங்கிரஸ் தலைமையும் இப்போது என்ன சொல்ல வேண்டும்? திரிணாமுல் தலைவர்களுக்கு எதிரான மத்திய அமைப்புகளின் தாக்குதலை அவர் பாராட்டியது போல ராகுல்-சோனியாவிற்கு எதிரான அமலாக்கத்துறையின் நடவடிக்கையை அவர் ஆதரிக்க வேண்டும் " என்று கூறியுள்ளது

திரிணாமுல் தலைவர் மதன் மித்ராவும் காங்கிரஸைத் தாக்கி, அவர்களின் தலைவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டால், மம்தா பானர்ஜி குரல் எழுப்ப வேண்டும், ஆனால் அனுப்ரதா மண்டல் அல்லது எங்கள் கட்சியைச் சேர்ந்த வேறு ஒருவரை அமலாக்கத்துறை அல்லது சிபிஐ அழைத்தால், யாரும் ஒரு வார்த்தையும் பேச மாட்டார்கள். இது துரதிஷ்டவசமானது என்று கூறியுள்ளார்

Tags:    

Similar News