விவசாய வருமானத்திற்கு வரி விலக்கு: அஸ்ஸாம் அமைச்சரவை ஒப்புதல்

அஸ்ஸாம் தேயிலை 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு விவசாய வருமானத்திற்கு 3 ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2023-06-10 03:39 GMT

பைல் படம்.

அஸ்ஸாம் தேயிலை 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு விவசாய வருமானத்திற்கு 3 ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அஸ்ஸாம் தேயிலை 200 ஆண்டுகளை நிறைவு செய்வதைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மூன்று ஆண்டுகளுக்கு விவசாய வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து கவுகாத்தியில் உள்ள ஜனதா பவனில் முதல்வர் டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவித்த அசாம் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா, அஸ்ஸாம் விவசாய வருமான வரிச் சட்டம், 1939-ன் கீழ் ஏப்ரல் 1 முதல் 3 ஆண்டுகளுக்கு விவசாய வருமானத்திற்கு வரி விலக்கு அளிப்பதற்காக அறிவிப்பை வெளியிட மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அஸ்ஸாம் தேயிலையின் 200 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2024-27 ஆம் ஆண்டில் அபினவ் பிந்த்ரா அறக்கட்டளை அறக்கட்டளையுடன் இணைந்து கவுகாத்தி முழுவதும் உள்ள 250 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ரூ.6 கோடியில் ஒலிம்பிக் மதிப்புகள் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் இளம் பருவத்தினர் பள்ளியை விட்டு வெளியேறுதலை தடுக்கும்.

மேலும் ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகளின்படி, அசாம் சரக்கு மற்றும் சேவை வரி (திருத்தம்) ஆணை, 2023க்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News