திரிணாமுல் காங்கிரஸில் சேருகிறாரா சுப்ரமணியன் சுவாமி?

டெல்லியில் பிரதமர் மோடியை சந்திப்பதற்கு முன்னதாக சுவாமியை மம்தா பானர்ஜிசந்தித்தது அவர் டிஎம்சியில் இணைவார் என்ற ஊகங்களை கிளப்பியுள்ளது

Update: 2021-11-24 13:17 GMT

மம்தாவுடன் சுப்பிரமணியன் சுவாமி

டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க வந்துள்ள மம்தா மம்தா பானர்ஜி, திரிபுரா வன்முறை  BSF அதிகார வரம்பை மேம்படுத்துதல் மற்றும் திரிபுராவில் நடந்து வரும் அராஜகங்கள்  ஆகியவற்றை எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரிபுராவில் "கட்சித் தொண்டர்கள் மீதான தாக்குதல்" மற்றும் இளைஞர் தலைவர் சயோனி கோஷ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் டில்லியில் திரிணாமுல் எம்பிக்கள் நடத்தும் தர்ணாவில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், அவர்களுடன் நிச்சயம் இணைந்திருப்பேன்  என்றும் பானர்ஜி கூறினார்.

அமித் ஷாவைத் தாக்கிய மம்தா, அமித் ஷா பாஜகவைச் சேர்ந்தவராக இருக்கலாம், ஆனால் நாட்டின்  உள்துறை அமைச்சர் பதவியில்  இருக்கிறார். எனது எம்.பி.க்கள் காலையிலிருந்து அவரது அலுவலகத்தின் முன் அமர்ந்திருக்கிறார்கள், ஆனால் அவர்களை அமித் ஷா சந்திக்கவில்லை என்று  கூறினார்.

இதற்கிடையே, பிரதமரை சந்திப்பதற்கு முன்பு, சுப்பிரமணியன் சுவாமியை மம்தா சந்தித்தது, பல்வேறு ஊகங்களை தலைநகர் அரசியலில் உருவாக்கியுள்ளது. 

Tags:    

Similar News