76 சதவீதம் வங்கிகளுக்கு திரும்பிய ரூ.2000 நோட்டுகள்: ரிசர்வ் வங்கி தகவல்

2000 ரூபாய் நோட்டுகளில் 76 சதவீதம் வங்கிகளுக்கு திரும்பியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Update: 2023-07-03 12:34 GMT

பைல் படம்

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் அதிக மதிப்புள்ள நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்ததில் இருந்து சுமார் 76 சதவீத ரூ.2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பியுள்ளன.

கடந்த மே 19ம் தேதி வணிகம் முடிவடையும் போது புழக்கத்தில் இருந்த ரூ.2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடியாக இருந்தது.

அறிவிப்புக்குப் பிறகு திரும்பிய ரூ. 2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ. 2.72 லட்சம் கோடி என்று வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளை மேற்கோள் காட்டி ரிசர்வ் வங்கி  தெரிவித்துள்ளது. எனவே தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் ரூ.0.84 லட்சம் கோடியாக உள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், முக்கிய வங்கிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள், புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட ரூ. 2000 மதிப்பிலான மொத்த ரூபாய் நோட்டுகளில், சுமார் 87 சதவீதம் டெபாசிட்களாகவும், மீதமுள்ள 13 சதவிகிதம் மற்ற மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளாகவும் மாற்றப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

கடைசி நேரத்தில் அவசரப்படுவதைத் தவிர்க்க, மக்கள் தங்களின் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்ற அடுத்த மூன்று மாதங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மக்கள் தங்கள் ரூ.2,000 நோட்டுகளை வங்கிக் கிளைகளிலும், ரிசர்வ் வங்கியின் பிராந்தியக் கிளைகளிலும் மாற்றலாம் அல்லது டெபாசிட் செய்யலாம். கணக்கு வைத்திருக்காதவர் எந்த வங்கிக் கிளையிலும் ஒரே நேரத்தில் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை ரூ.20,000 வரை மாற்றிக்கொள்ளலாம்.

பொதுமக்கள் தங்களின் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்ற செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாக முடிவு செய்யப்பட்டுள்ளது.  சூழ்நிலையை பொறுத்து காலக்கெடுவை ரிசர்வ் வங்கி மறுபரிசீலனை செய்யலாம்.

Tags:    

Similar News