பி.எஸ்.எல்.வி., சி - 53 ஏவுகணை விண்ணில் பயணம்..!

ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மூன்று செயற்கைக் கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. - சி 53 ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் பயணமானது.

Update: 2022-06-30 14:05 GMT

ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மூன்று விண்ணில் பயணமான பி.எஸ்.எல்.வி. - சி 53 ஏவுகணை.

இஸ்ரோ என சுருக்கமாக இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு நாட்டின் பாதுகாப்பு தொலை தொடர்பு தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆய்வு பணிகளுக்கு பி.எஸ்.எல்.வி. - ஜி.எஸ்.எல்.வி. வகை ஏவுகணை வாயிலாக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதுதவிர வணிக ரீதியாக வெளிநாடுகளின் செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சிங்கப்பூர் நாட்டிற்கு சொந்தமான டி.எஸ். - இ.ஓ. உட்பட மூன்று செயற்கைக் கோள்கள் பி.எஸ்.எல்.வி. - சி 53 ஏவுகணை மூலமாக இன்று மாலை 6 மணி அளவில் விண்ணில் ஏவப்பட்டது.

முன்னதாக, இதற்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் ஜூன் 29 மாலை 5 மணிக்கு துவங்கியது. சிங்கப்பூரை சேர்ந்த மூன்று செயற்கைக் கோள்களில் முதன்மையானதான டி.எஸ். - இ.ஒ. செயற்கைக் கோள் 365 கிலோ எடை உடையது. இது தெளிவாக வண்ண புகைப்படங்களை எடுக்கும் திறன் உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News