பிரதமர் மோடி குஜராத்தில் 108 அடி உயர அனுமன் சிலையை திறந்து வைத்தார்

குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள 108 அடி உயர அனுமன் சிலையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.;

Update: 2022-04-16 09:00 GMT

 குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள 108 அடி உயர அனுமன் சிலையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

அனுமன் வாழ்க்கையுடன் தொடர்புடைய நாட்டின் 4 திசைகளிலும் உள்ள ஊர்களில் அனுமன் சிலை உருவாக்கப்பட்டு வருவதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. வடதிசையில் சிம்லாவில் 2010-ம் ஆண்டு அனுமன் சிலை திறக்கப்பட்டது. மேற்கு திசையில், குஜராத் மாநிலம் மோர்பியில் உள்ள பாபு கேசவானந்த் ஆசிரமத்தில் 108 அடி உயர அனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது.

இதனை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். தென்திசையில், ராமேஸ்வரத்தில் அனுமன் சிலை வைப்பதற்கான பணியும் தொடங்கி உள்ளது.

Similar News