குடியரசு தலைவர் தேர்தல்: யஷ்வந்த் சின்ஹா ​​இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்

Presidential Election - குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ​​இன்று வேட்புமனு வேட்புமனு தாக்கல் செய்கிறார்

Update: 2022-06-27 04:19 GMT

எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஸ்வந்த் சின்ஹா.

Presidential Election - ஜூலை 18, 2022 அன்று நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, கூட்டு எதிர்க்கட்சி சார்பில் ஒருமித்த வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

யஷ்வந்த் சின்ஹா, திங்கள்கிழமை காலை 11:30 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அவருடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மம்தா பானர்ஜி, என்சிபியின் சரத் பவார், காங்கிரஸின் மல்லிகார்ஜுன் கார்கே, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் (டிஆர்எஸ்) செயல் தலைவரும் அமைச்சருமான கே.டி.ராமராவ் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகன் ராமராவ் (கே.சி.ஆர் ) மற்றும் சில டிஆர்எஸ் எம்பிக்களும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு ஜூன் 25ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர்கள் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News