குஜராத் சட்டமன்ற உறுப்பினர் அனில் ஜோஷியாரா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

குஜராத் சட்டமன்ற உறுப்பினர் அனில் ஜோஷியாரா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Update: 2022-03-14 16:08 GMT

பிரதமர் நரேந்திர மோடி

குஜராத் மாநிலம் பிலோடா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அனில் ஜோஷியாரா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் குஜராத்தி மொழியில் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;

"பிலோடா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அனில் ஜோஷியாரா மறைவு பெருந்துயரை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பொது ஊழியராக அவர் எப்போதும் நினைவு கூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News