ரயில்களில் வைபை வசதி நிறுத்தப்படுகிறது- மக்களவையில் மத்திய அமைச்சர்

ரயில்களில் வைபை வசதி வழங்குவது நிறுத்தப்படுவதாக தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-08 03:28 GMT

ரயில்களில் வைபை வசதி வழங்குவது நிறுத்தப்படுவதாகவும், 5 ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர்தான், ரயில்களுக்குள் இணைய சேவை கிடைக்கும் என்று ஒன்றிய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் அளித்த பதிலில், தற்போது 100 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்லும் ரயில்களில் 4 ஜி வாயிலான தொலைத்தொடர்பு சேவையில் இடையூறு ஏற்படுகிறது. எனவே, 5 ஜி அறிமுகப்படுத்தப் பட்ட பின்னர்தான் ரயில்களுக்குள் இணைய சேவை கிடைக்கும் என்று தெரிவி்த்துள்ளார்.

Tags:    

Similar News