ஜம்மு-கஷ்மீர்: பாதுகாப்புப் படையினருடன் மோதிய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-கஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Update: 2022-05-30 17:15 GMT

ஜம்மு-கஷ்மீர் யுனியன் பிரதேசம் புல்வாமா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ராஷ்ட்ரிய ரைபிள்ஸ், மத்திய ரிசர்வ் காவல்படை, ஜம்மு-கஷ்மீர் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைகள் குழு ஆகியவை கூட்டாக நடத்திய தேடுதல் வேட்டையின்போது , இந்த துப்பாக்கி சண்டை நடந்தது. அவர்களிடமிருந்து இரண்டு ஏ கே-47 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.

Tags:    

Similar News