இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்: மணிப்பூரில் இன்று தொடக்கம்

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் மணிப்பூரில் இன்று துவங்குகிறது.

Update: 2024-01-14 03:28 GMT

ராகுல்காந்தி மீண்டும் தொடங்கவுள்ள இந்திய ஒற்றுணை நீதிப் பயணத்தின் லோகோ, டேக்லைனை காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே கடந்த 6ம் தேதி வெளியிட்டிருந்தார்.

மணிப்பூரில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் (பாரத் ஜோடோ நியாய் யாத்ரா) நாட்டின் அடிப்படை சமூக, அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் என்று கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே  தெரிவித்தார். பாரத் ஜோடோ நியாய் யாத்ரா லோகோ மற்றும் "நியாய் கா ஹக் மில்னே தக்" என்ற டேக்லைனையும் கார்கே வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த யாத்திரை மணிப்பூரின் இம்பாலில் இன்று தொடங்கி நாட்டின் 15 மாநிலங்கள் வழியாக சென்று மும்பையில் நிறைவடைகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி தோல்வியை சந்தித்ததால், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த யாத்திரையின் மூலம் கட்சித் தொண்டர்களின் மன உறுதியை அதிகரிக்க காங்கிரஸ் விரும்புகிறது என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சத்தீஸ்கரில் 90 உறுப்பினர்களைக் கொண்ட பாரதிய ஜனதா கட்சி 54 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது, அதே நேரத்தில் காங்கிரஸ் 35 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் கோண்ட்வானா கண்டந்திரா கட்சி வெற்றி பெற்றது.

Tags:    

Similar News