இந்தியாவில் தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது, 24 மணி நேரத்தில் 1,00,636 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 636 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2021-06-07 05:00 GMT

பைல் படம்

இந்தியாவில் நேற்று காலை 7 மணி முதல் இன்று காலை 7 மணிவரை தொற்று பாதித்தவர்களின் நிலைக் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 636 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 89 லட்சத்து 9 ஆயிரத்து 975 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் நாட்டில் 2,427 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,49,186 ஆக உயர்ந்தது.

கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 399 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 71 லட்சத்து 59 ஆயிரத்து 180 ஆக அதிகரித்தது.

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 14 லட்சத்து ஆயிரத்தி 609 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News