கொள்ளையடிக்க கோர்ஸ்: புதுசு புதுசா யோசிக்கிறாங்க

போபால் அருகே கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கு "திருட்டு, கொள்ளை மற்றும் கொள்ளையடிக்கும் கலைகளில்" பயிற்சி அளிப்பதாக அறியப்படுகிறது.

Update: 2024-08-21 09:19 GMT

நுழைவுத்தேர்வில் தேர்வாக பயிற்சி, வேலை இன்டர்வியூக்கான பயிற்சி என எவ்வளவோ விஷயங்களை பார்த்து இருப்போம். ஆனால் கொள்ளையடிக்க கற்றுக் கொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா? ம.பியில் தான் அப்படி ஒரு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு சிறு வித்தியாசம். எப்படி கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்கு தான் இங்கு பயிற்சி தரப்படுகிறது.

ராஜ்கர் மாவட்டத்தில் கடியா, குல்கேடி,ஹல்கேடி என்ற கிராமங்களில் இந்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 12 அல்லது 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளை, குற்றச் செயல்களில் பயிற்றுவிப்பதற்காக அவர்களது பெற்றோர்கள் இந்தக் கிராமங்களுக்கு அனுப்புகிறார்கள். பெற்றோர்கள், கும்பல் தலைவர்களைச் சந்தித்த பிறகு, தங்கள் குழந்தைக்கு யார் சிறந்த "கல்வி" வழங்க முடியும் என்பதை முடிவு செய்கிறார்கள். இந்த மோசமான பாடத்திட்டத்தில் சேர, குடும்பங்கள் ரூ. 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை கட்டணம் செலுத்துகின்றனர்.

அவர்களுக்கு பிக்பாக்கெட் அடிப்பது, மக்கள் கூடும் இடங்களில் பைகளைப் பறிப்பது, வேகமாக ஓடுவது, போலீஸாரைத் தவிர்ப்பது, பிடிபட்டால் அடிப்பதைத் தாங்குவது போன்ற பல்வேறு குற்றவியல் திறன்கள் ளை கற்பிக்கப்படுகிறது.

பயிற்சியும் கொடுத்து அவர்களை கொள்ளையடிக்க அனுப்பும் கொள்ளையர்கள், அதில் வரும் பணத்தில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ரூ.5 லட்சம் வரை கொள்ளைடியத்து தந்த சிறார்களின் பெற்றோர்களுக்கு வெகுமதியாக தருகின்றனர்.

இந்த கிராமங்கள் மிகவும் தந்திரமான திருடர்களை உருவாக்கியுள்ளன, அவர்களின் குற்றச் செயல்கள் இந்தியா முழுவதும் தலைப்புச் செய்திகளை உருவாக்கியுள்ளன.

இந்த கிராமங்களில் இருந்து அண்மையில் பயிற்சி பெற்ற ஒருவர் ஹைதராபாதில் தொழிலதிபர் இல்லத் திருமணத்தில் கைவரிசை காட்டி கிட்டத்தட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள நகைகள். ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை அள்ளிச் சென்றிருக்கிறார்.

சம்பவத்தை கச்சிதமாக அரங்கேற்றிவிட்டு பணம், நகையுடன் சொந்த ஊரான கடியாவுக்கு எஸ்கேப் ஆகி உள்ளனர். பின்னர், அங்கிருந்து நேராக கன்வர் எனப்படும் சிவ யாத்திரையில் கலந்து கொண்டு, போலீசாரை திக்குமுக்காட வைத்துள்ளார்.

சம்பந்தப்பட்ட கிராமங்களுக்குச் சென்று குற்றவாளிகளை பிடிக்கச் செல்வது போலீசாருக்கு சவால் நிறைந்த பணியாக இருக்கிறது.

இந்த கிராமங்கள், குறிப்பாக கடியா, குல்கேடி மற்றும் ஹல்கேடி ஆகியவை பெரும்பாலும் "நர்சரிகள்" அல்லது "பள்ளிகள்" என்று குறிப்பிடப்படுகின்றன, அங்கு குழந்தைகள் சிறு வயதிலிருந்தே தொழில்முறை திருடர்களாக மாற்றப்படுகிறார்கள்

இந்த கிராமங்கள் ரகசியமாகவும், சந்தேகத்தாலும் மறைக்கப்பட்டுள்ளன. பெண்கள், வெளியாரைப் பார்த்ததும், காது கேட்காதது போல் நடிக்கிறார்கள்.

அறிமுகமில்லாத ஒருவர் கிராமத்திற்குள் நுழைந்தால், குடியிருப்பாளர்கள் உடனடியாக விழிப்புடன் இருப்பார்கள், குறிப்பாக கேமரா அல்லது மொபைல் ஃபோனைக் கண்டால்.

அன்னியர்கள் அல்லது காவல்துறை சம்பந்தப்பட்ட நபராக இருப்பின் அவர்களை செல்போன் கேமராவில் போட்டோ எடுத்து, ஊரில் உள்ள அனைவருக்கும் அனுப்பி உஷார்படுத்திவிடுகின்றனர். குறிப்பாக ஊருக்குள் இருக்கும் பெண்களுக்கு இது ஒரு தலையாய பணியாகவே ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

300க்கும் மேற்பட்ட சிறார்கள் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று திருட்டு, கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளதாக கூறும் போலீசார், போதிய கல்வியறிவு இல்லாததே இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News