வலுவிழக்கும் ஜவாத் புயல்: தப்பித்த ஒடிசா, ஆந்திரா

ஜவாத் புயல் படிப்படியாக வலுவிழந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-12-04 07:05 GMT

ஜவாத் புயல்

ஜவாத்' புயல், சனிக்கிழமை மதியம் ஒடிசா-ஆந்திரா கடற்கரையை அடையும் முன் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது படிப்படியாக வலுவிழந்து, அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து, ஒடிசா கடற்கரையை ஒட்டி வடக்கு-வடக்கு நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பூரியை அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து, இது மேலும் வலுவிழந்து வடக்கு-வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரையை ஒட்டி மேற்கு வங்கக் கடற்கரையை நோக்கி நகரும் என்று ஐஎம்டி தனது சமீபத்திய புல்லட்டின் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் ஏற்கனவே 'குலாப்' மற்றும் 'யாஸ்' புயல்களால்  பாதிக்கப்பட்டுள்ள ஓடிசாவிற்கு இது நிச்சயம் ஆறுதலான செய்தி.  

Tags:    

Similar News