மராட்டிய ஆளுனருக்கு கொரோனா தொற்று..!

Current Governor Of Maharashtra -மராட்டிய ஆளுனர் பகத் சிங் கோஷ்யாரி கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2022-06-22 06:16 GMT

மராட்டிய ஆளுனர் பகத் சிங் கோஷ்யாரி. 

Current Governor Of Maharashtra - மராட்டிய ஆளுனர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து சிகிச்சைக்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆளுனர் பகத்சிங் கோஷ்யாரி அனுமதிக்கப்பட்டுள்ளார். மராட்டியத்தில் , தற்போது பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுனர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பது அரசியல் சிக்கலை அதிகப்படுத்தியுள்ளது.

இந்திய அரசியல்வாதியும், உத்தராகண்ட் மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரும், உத்தராகண்ட் மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சரும் ஆவார். ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் உறுப்பினரான பகத் சிங் கோசியாரி, பாரதிய ஜனதா கட்சியி தேசியத் துணைத் தலைவராகவும், உத்தராகண்ட் மாநில பாரதிய ஜனதா கட்சியின் முதல் மாநிலத் தலைவராகவும் பணியாற்றியவர்.

உத்தராகண்ட் மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சராக 2001 முதல் 2002 முடியவும், பின்னர் 2002 முதல் 2007 ஆம் ஆண்டு முடியவும் பதவியில் இருந்தவர். 2008 ம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு முடியவும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 16 மே 2014-இல் பதினாறாவது மக்களவைக்கு, நைனிடால்-உதம்சிங் நகர் மக்களவைத் தொகுதியில் இருந்து, நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், பகத் சிங் கோஷ்யாரி.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News