முதல்வர் ஸ்டாலின்-யஸ்வந்த் சின்ஹா நாளை சந்திப்பு..!

குடியரசுத்தலைவர் தேர்தலில் ஆதரவு கேட்க எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்கா, முதல்வர் ஸ்டாலினை முறைப்படி நாளை சந்திக்கிறார்.

Update: 2022-06-29 12:56 GMT
குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிடும் எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் யஸ்வந்த் சின்ஹா.

குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா நிறுத்தப்பட்டுள்ளார். இதற்காக வாக்கு சேகரிக்க திருவனந்தபுரம் வந்தார். இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நாளை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார். ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறுகிறது. பாஜக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர்.

இதையடுத்து, எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா தென் மாநிலங்களில் வாக்கு சேகரிப்பை தொடங்கினார். இதற்காக நேற்று இரவு விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தடைந்தார். அங்கு அவரை அம்மாநில தொழில்துறை அமைச்சர் ராஜீவ் வரவேற்றார். கேரளாவில் வாக்கு சேகரிப்பை முடிக்கும், நாளை யஷ்வந்த் சின்கா சென்னை வருகிறார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார் என, தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News