75-வது சுதந்திர தினம்: நினைவு சின்னங்கள், சுற்றுலா தலங்களை பார்வையிட இலவச அனுமதி
நாடு முழுவதும் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னம், அருங்காட்சியகங்களை பார்வையிட இலவச அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.;
75-வது சுதந்திர தினத்தையொட்டி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள், அருங்காட்சியங்கள், தொல்லியல் தலங்கள் மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களை பார்வையிட இலவச அனுமதி வழங்கப்படுவதாக என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.