கார்த்தி சிதம்பரம் வீட்டில் மீண்டும் சிபி ஐ சோதனை
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்;
எம்.பி கார்த்தி சிதம்பரம்
சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் கடந்த மே மாதம் கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தற்போது மீண்டும் சென்னையில் உள்ள கார்த்தி சிதம்பரம் இல்லத்தில் டெல்லியில் இருந்து வந்த 6சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த முறை சோதனையின் போது ஒரு அறை பூட்டி இருந்ததால் தற்போது சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது