பிரதமரின் வாகனத்தின் மீது செல்போன் வீச்சு: புதிய தகவல்கள்

உற்சாகத்தில் பிரதமர் வாகனத்தின் மீது செல்போனை வீசிய பாஜகவை சேர்ந்த பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

Update: 2023-05-01 03:46 GMT

பிரதமர் வாகனத்தின் மீது வீசப்பட்ட செல்போன் வட்ட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது

பிரதமர் மோடி நேற்று கர்நாடக மாநிலம் மைசூருவில் ஜம்பு சவாரி ஊர்வல பாதையில் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று தேர்தல் பிரசாரம் செய்தார். ஊர்வலத்தின்போது பொதுமக்களும், பா.ஜனதா தொண்டர்களும் மோடியின் வாகனத்தின் மீது பூக்களை தூவினர். மோடியின் வாகனம் மைசூரு டவுன் சிக்ககடியாலா பகுதியில் சென்றபோது அவரது வாகனத்தின் இடது பக்கத்தில் இருந்து ஒருவர் திடீரென செல்போனை வீசினார்.

மே 10ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் நின்று கொண்டு சாலைக் காட்சியில் ஈடுபட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி மொபைல் போன் வீசப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

எந்த ஒரு "தவறான எண்ணமும்" இல்லாத ஒரு பெண் பாஜக தொண்டர் ஒருவரால் "உற்சாகத்தில்" செல்போன் வீசப்பட்டது என கூறப்படுகிறது

வாகனத்தின் மீது செல்போன் வீசப்பட்ட பின்னர், வாகனத்தின் போனட்டில் செல்போன் விழுந்தது . அவருடன் வந்த சிறப்பு பாதுகாப்புக் குழு காவலர்களிடம் அதை பிரதமர் சுட்டிக்காட்டினார். கூடுதல் காவல்துறை இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) அலோக் குமார் கூறுகையில், பிரதமர் எஸ்பிஜியின் பாதுகாப்பில் இருந்தார். அந்த பெண் (பிரதமரின் வாகனத்தின் மீது போன் விழுந்தது) பாஜக தொண்டர். எஸ்பிஜியினர் அதை அவரிடம் திருப்பிக் கொடுத்தனர்" என்று கூறினார்.

"உற்சாகத்தில் நிகழ்வின், அது தூக்கி எறியப்பட்டது, அவருக்கு எந்த (தவறான) எண்ணமும் இல்லை, ஆனால் நாங்கள் அந்த பெண்ணைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம் என்று அவர் மேலும் கூறினார்.

இருப்பினும் மோடியின் ஊர்வலம் முழுமையாக நடந்தது. மோடி தனது ஊர்வலத்தை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்தினார்.

மைசூரு-குடகு எம்பி பிரதாப் சிம்ஹா மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.எஸ்.ஈஸ்வரப்பா, எஸ்.ஏ.ராமதாஸ் ஆகியோருடன் பிரதமர் மோடி சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்களை நோக்கி கை அசைத்துக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

Tags:    

Similar News