ஒரே நேரத்தில் 71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசில் வேலை: நியமன ஆணை வழங்கிய பிரதமர் மோடி

மத்திய அரசின் பல்வேறு துறைகளில், 71 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கான பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார்.

Update: 2023-04-13 13:00 GMT

பிரதமர் மோடி. (பைல் படம்)

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 71 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கான பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார்.

பின்னர் காணொலி வாயிலாக பேசிய அவர், நாட்டின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் புதிய வேலைகளை மத்திய அரசு உருவாக்கி வருவதாக தெரிவித்தார். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் அரசு வேலைகள் வழங்கும் பணி வேகமாக நடந்து வருவதாகவும் கூறினார். இளைஞர்கள் நவீன தொழில்நுட்பம் கூடிய ட்ரோன்களை தயாரித்து வருவதாக கூறிய அவர், யுவ சக்திக்கும் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Tags:    

Similar News