ஜம்மு காஷ்மீர், ஹரியானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

Update: 2024-08-16 11:45 GMT

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான தேர்தல் அட்டவணை.

ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாகவும் ஹரியானாவில் ஒரே கட்டமாகவும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் சட்டசபை தேர்தல்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாகவும், ஹரியானாவில் அக்டோபர் 1ஆம் தேதி ஒரே கட்டமாகவும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். இரு மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் தேர்தல் பரபரப்பு ஒலித்தது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, ஜம்மு-காஷ்மீரில் செப்டம்பர் 18 முதல் மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல்களும், ஹரியானாவில் அக்டோபர் 1-ஆம் தேதி ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறும்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளுக்கு செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

2019ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெற  மாநிலத்தின் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 11838 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். எப்போதும் போல், தனி மகளிர் வாக்குச்சாவடிகள் கட்டப்படும்.

ஜம்மு-காஷ்மீர் வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 20-ம் தேதி வரும் என்று தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் அக்டோபர் 1ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.


ஹரியானாவில் 20 ஆயிரத்து 929 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். மாநிலத்தில் முதியோர் வாக்காளர்கள் அதிகம்.

இரு சட்டசபைகளுக்கும் அக்டோபர் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான அரசியல் சட்ட சிறப்பு அந்த௧்து  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரதமர்மோடியால் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் அங்கு 2024 அக்டோபர் மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News