இயற்பியலில் 85 , வேதியியலில் 5: நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்டவரின் மதிப்பெண்

வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவரான அனுராக் யாதவ், கோட்டாவில் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வருவதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-21 03:19 GMT

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வைச் சுற்றியுள்ள பெரும் சர்ச்சைக்கு மத்தியில், தேர்வுக்கு முன் வினாத்தாளை அணுகியதாகக் கூறப்படும் நான்கு பீகார் மாணவர்களின் மதிப்பெண் அட்டைகள் ஒரு கதையைச் சொல்கின்றன.

வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவரான அனுராக் யாதவ், கோச்சிங் ஹப் கோட்டாவில் மருத்துவ நுழைவுத் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்தபோது, ​​அவரது மாமா சிக்கந்தர் அவரை சமஸ்திபூருக்குத் திரும்பச் சொல்லி, வினாத்தாள் தயாராக உள்ளதாக கூறியதாக காவல்துறையிடம் கூறியுள்ளார். அவரது மாமா சிக்கந்தரும் கைது செய்யப்பட்டுள்ளார்

தேர்வுக்கு முந்தைய நாள் இரவே சில கேள்விகளும் அதற்கான பதில்களும் கிடைத்ததாக அவர் கூறியுள்ளார். இந்த கேள்விகள் அடுத்த நாள் உண்மையான தாளில் இடம்பெற்றன, என்றார்.

நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சியால் வழங்கப்பட்ட அனுராக்கின் ஸ்கோர்கார்டு, அவர் 720க்கு 185 மதிப்பெண்கள் எடுத்ததாகக் காட்டுகிறது. அவருடைய மொத்த சதவிகித மதிப்பெண் 54.84 (ரவுண்ட் ஆஃப்) ஆகும். ஆனால் தனிப்பட்ட பாடங்களில் அவர் பெற்ற மதிப்பெண்களைப் பார்த்தால், எண்களின் வினோதமான பொருத்தமின்மை தெரிகிறது. அனுராக் இயற்பியலில் 85.8 சதவீதமும், உயிரியலில் 51 சதவீதமும் பெற்றுள்ளார். ஆனால் அவரது வேதியியல் 5 சதவிகிதம் குறைவாக உள்ளது. 22 வயது இளைஞன் தேர்வுக்கு ஒரு நாள் முன்னதாகவே கேள்விகளைப் பெற்றதாக ஒப்புக்கொண்ட நிலையில், வேதியியல் விடைகளை மனப்பாடம் செய்ய அவருக்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை என்பதை இந்த மதிப்பெண்கள் தெரிவிக்கின்றன.

அனுராக்கின் அகில இந்திய ரேங்க் 10,51,525 என்றும் OBC விண்ணப்பதாரராக அவரது ரேங்க் 4,67,824 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வினாத்தாள்களுக்காக நான்கு மாணவர்களை அமித் ஆனந்த் மற்றும் நிதிஷ் குமார் ஆகியோருடன் தொடர்பு கொண்டதாக சிக்கந்தர் யாதவேந்து போலீசாரிடம் கூறியுள்ளார். அமித் மற்றும் நிதிஷ், ஒரு மாணவருக்கு ரூ. 30-32 லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர்.

இது குறித்து சிக்கந்தர் கூறுகையில், நான்கு மாணவர்கள் தேர்வெழுத உள்ளதாக அவர்களிடம் கூறினேன். பேராசை காரணமாக ஒவ்வொரு மாணவரிடமும் வினாத்தாளை வாங்க 40 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என கூறினேன்.

அனுராக் கைது செய்யப்பட்ட நிலையில், மற்ற மூவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் தேர்வில் 720க்கு 300 மதிப்பெண்கள் பெற்றுள்ளார், மேலும் சதவீதம் 73.37 (ரவுண்ட்-ஆஃப்) ஆகும். ஆனால் மீண்டும், தனிப்பட்ட மதிப்பெண்கள் கேள்விகளை எழுப்புகின்றன. மாணவர் உயிரியலில் 87.8 சதவீதமும், இயற்பியல் மற்றும் வேதியியலில் 15.5 மற்றும் 15.3 சதவீதமும் பெற்றுள்ளார்.

மற்ற இரண்டு மாணவர்களின் மதிப்பெண் அட்டைகள், மூன்று பாடங்களிலும் சீரான மதிப்பெண்களை குறிக்கின்றன. அவர்களில் ஒருவர் 720க்கு 581 மதிப்பெண்களும் மற்றவர் 483 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் ஆயுஷ் படிப்புகளில் சேர்வதற்கான அகில இந்தியத் தேர்வு முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, பல முறைகேடுகள் வெளிவந்தன. 67 மாணவர்கள் 720/720 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர், அவர்களில் ஆறு பேர் ஹரியானாவில் உள்ள ஒரே மையத்தைச் சேர்ந்தவர்கள். இந்த முறை உயர் கட் ஆஃப் ஆனது, மருத்துவக் கல்லூரி சீட் கிடைக்குமா, கிடைக்காதா என்று பல மாணவர்களை யோசிக்க வைத்துள்ளது. விண்ணப்பதாரர்கள் மறுதேர்வைக் கோரி நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்தன

Tags:    

Similar News