அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி : இந்திய அரசு சாதனை

5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி தகர்க்கும் இந்தியாவின் அக்னி- 5 ஏவுகணை சோதனை வெற்றியடைந்தது.

Update: 2021-10-27 19:41 GMT

இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றி

இந்தியாவின் பலத்தை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் இந்திய அரசு அவ்வப்போது ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 ரக ஏவுகணையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.


சோதனைக்கு முன்னதாக அக்னி ஏவுகணைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதன் பின்னரே அக்னி 5 ஏவுகண சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகனை சோதனை ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் நடந்தாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News